Thursday, April 22, 2010

நடந்து சென்றாயோ?

அள்ளி அணைக்கும் குளிர் காற்றில்...
என் மனம் மட்டும் வெப்பம் கொள்கிறதே...!!??
மழை துளியோடு நீயும் நடந்து சென்றாயோ?

Wednesday, April 21, 2010

மழைத்துழி

தாகம் கொண்ட தேடல்... மண்ணின் வசம் கலக்கிறது!!!
மௌனம் கொண்ட பூமியின் இதழ்... சுவாசத்தை மறக்கிறது!!!
திசை மாறும் காற்றை போல.....
உருவம் இல்லாத உன்னை... தனிமையில் ரசிக்கிறேன்!!! -- மழைத்துழி

Monday, April 19, 2010

உன் கண்கள்

கற்பதும் கற்பிப்பதும் உன் கண்கள் என்றால்....
துடிப்பது தவிப்பதும் என் இதயமல்லவா!!???

Saturday, March 27, 2010

உன் ஞாபகம் புகைப்படமானதே....

புயலடித்து ஒய்ந்தப்பின் உதிர்ந்த இலைப்போல் உள்ளம் நொறுங்கிப்போனேன்....
உன் ஞாபகமும் புகைப்படமாய் போனதால்....

Thursday, March 25, 2010

நீயா...???

வெற்றுக் காகிதமாய் இருந்த என் இதயப் பக்கங்களில்...
பல வண்ணங்களைப் பதித்த உன் நினைவுகளைத் தந்த நீயா
இன்று அக்காகிதத்தில் ஓட்டை என்கிறாய்???

Tuesday, March 16, 2010

கண்கள்....

மூச்சு இல்லாமல் முனங்கும் புல்லாங்குழலின் உயிரோ???
என்னைக் களவாடிச் சென்ற உன் கண்கள்....

நினைவுகள்....

தொடர்ந்து வந்தாயோ மழைத் துளியாய்???
தித்திக்கும் முத்தத்துடன் நினைந்து நிற்கின்றனவே என் இதழ்கள்!!!

Thursday, January 28, 2010

மௌனப் புன்னகை

என் வாழ்விலிருந்து விலகிப்போனவள்...
என்னில் நீங்காத நினைவுகளை மட்டும்
விட்டுவிட்டு சென்றது ஏன்? விடைத்தெரியாமல்...
என்னில் மௌனப் புன்னகை...
நினைவுகளாவது இருகின்றனவே என்று...!!!
அவளின் இனிமையான வாழ்வுக்காக இன்றும் என் நெஞ்சம்
வேண்டிக் கொண்டுதான் இருக்கின்றது.. என்ன இருந்தாலும்
நான் நேசிக்கும் இதயமல்லவா...?

இனி எல்லாம் சுகமே..

இன்றுதான் சந்தித்தது போல் இருக்கிறது...
பல ஆண்டுகளாய் என்னுள் நீ வாழ்வதுபோல் உணர்வு...
இதை பாசமென்று பூரிப்படயவா? நட்பென்று பெருமிதம் கொள்ளவா?
என் விழி பார்வையிலிருந்து நீ காணாமல்போன சில நாட்கள்...
என் வாழ்வில் இருள் சூழ்ந்த பல ஜென்மங்கள்...
உணர்ந்தேன் காதலை... உரைத்தேன் உன்னிடம்!!!
ஏற்றுக்கொள்வாய் என எண்ணவுமில்லை... நிறைவேறுமென்று நம்பவுமில்லை...
உன் இதழில் மௌனம்.. விழிகளில் ஆயிரம் அர்த்தங்கள்!!!
வெற்றியின் உச்சத்தில் நான்... என் துணையாய் நீ....
இனி என் வாழ்வில் எல்லாம் சுகமே..

Wednesday, January 27, 2010

விடியலைத் தேடி.....

சிறகடிக்கும் மின்மினிக்கும் தெரியும் காலம் முடியப்போவது....
இங்கே உன் நினைவுகள் வந்து ரீங்காரமிட....
இன்னும் எத்தனை நாட்களுக்கு உன் நினைவுகள் என்று தெரியாமலே....
நான் மட்டும் இங்கே விட்டில் பூச்சியாய்....
விடியலைத் தேடி.....

பாதை மாறுமோ???

உன் விரல் தொட்ட நிமிடம் எங்கே...???
உன் தோள் சாய்ந்த தருணம் எங்கே...???
கண்ணீரின் வழியே என் இதயம் உருக...
உன்னை சேர என் உயிரும் ஏங்க...
மீண்டும் வாழத்தான் கூடுமோ???
பிரிவும் பாதை மாறுமோ???

தொலைதூரம் போய்விட்டாயோ...???

ரணங்களின் தடங்கள் இல்லை...
தவிப்போடு...
ஊமை வார்த்தைகளின் தொல்லை!!!
என் நினைவெல்லாம் நீ மட்டுமே...
உறக்கமில்லா இரவுகளில் உன் நினைவுகள் மட்டுமே....
தொலைதூரம் போய்விட்டாயோ???
இல்லை மீட்கும் தொலைவில் நான் இல்லையோ???

Tuesday, January 26, 2010

உன்னை இழப்பேனோ என்ற பயம் !!!

சொல்ல நினைக்கும் நிமிடங்களில் உயிருக்கு உள்ளே தயக்கம்....

சொல்ல மறக்கின்ற நிமிடங்களில் உன்னை இழந்துவிடும் பயம்...

எத்தனை முறை சொல்லி பார்த்தாலும் உயிர் உன்னை இழப்பதில்லை.....

நிலவின் பாதை

தேடும் பொழுதில்.... நினைவுகள், என்னில் இல்லை!!!

தேய்ந்த பின் வருமோ நிலவின் பாதை.....

அவள் நினைவுகள்...

வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயமும்...
நினைவுகளின் சாபங்களாய் தொடர்கிறது!!!
சப்தமே இல்லாமல் எரிகின்றது.... அவள் வாழ்ந்த இந்த இதயம்...!!!
பனித்துளியின் சிறகு கூட தீமூட்ட கற்றுக்கொண்டது...!!!
என் காதல் புத்தகத்தில்...
கருகிய வாசமே அவள் நினைவுகள்...
எரிந்துபோய் மீதமுள்ள பக்கங்களே இனி நான் வாழப்போகும் வாழ்க்கை!!!

அறியாமலே...

உணர்வுகளோடு பயணம் செய்கிறேன்....

என் விழி சிந்திய ஒரு துளி நீரில், நீ கலந்ததை அறியாமலே....