Thursday, January 28, 2010

இனி எல்லாம் சுகமே..

இன்றுதான் சந்தித்தது போல் இருக்கிறது...
பல ஆண்டுகளாய் என்னுள் நீ வாழ்வதுபோல் உணர்வு...
இதை பாசமென்று பூரிப்படயவா? நட்பென்று பெருமிதம் கொள்ளவா?
என் விழி பார்வையிலிருந்து நீ காணாமல்போன சில நாட்கள்...
என் வாழ்வில் இருள் சூழ்ந்த பல ஜென்மங்கள்...
உணர்ந்தேன் காதலை... உரைத்தேன் உன்னிடம்!!!
ஏற்றுக்கொள்வாய் என எண்ணவுமில்லை... நிறைவேறுமென்று நம்பவுமில்லை...
உன் இதழில் மௌனம்.. விழிகளில் ஆயிரம் அர்த்தங்கள்!!!
வெற்றியின் உச்சத்தில் நான்... என் துணையாய் நீ....
இனி என் வாழ்வில் எல்லாம் சுகமே..

No comments:

Post a Comment